சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
28 - அறிவழிய மயல்பெருக (திருச்செந்தூர்) Songs from this thalam திருச்செந்தூர் 1334 - கன்றிவரு நீல
28 திருச்செந்தூர் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 15 - வாரியார் # 23 )
அறிவழிய மயல்பெருக
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தனதனன தனதனன தனதனன தனதனன
தனதனன தனதனன ...... தனதானா
அறிவழிய மயல்பெருக உரையுமற விழிசுழல
அனல்-அவிய மலமொழுக ...... அகலாதே
அனையுமனை அருகிலுற வெருவியழ உறவும்-அழ
அழலினிகர் மறலியெனை ...... அழையாதே
செறியுமிரு வினைகரண மருவுபுலன் ஒழியவுயர்
திருவடியில் அணுகவர ...... அருள்வாயே
சிவனைநிகர் பொதியவரை முநிவன்-அக மகிழஇரு
செவிகுளிர இனியதமிழ் ...... பகர்வோனே
நெறிதவறி அலரிமதி நடுவன்மக பதிமுளரி
நிருதிநிதி பதிகரிய ...... வனமாலி
நிலவுமறை அவன்-இவர்கள் அலையஅர சுரிமைபுரி
நிருதனுர மறஅயிலை ...... விடுவோனே
மறிபரசு கரம்-இலகு பரமன்-உமை இருவிழியும்
மகிழமடிம் இசைவளரும் ...... இளையோனே
மதலைதவ ழும்-உததியிடை வருதரள மணிபுளின
மறையவுயர் கரையிலுறை ...... பெருமாளே.
Easy Version:
அறிவழிய மயல் பெருக உரையுமற விழிசுழல
அனலவிய மலமொழுக அகலாதே
அனையுமனை அருகிலுற வெருவியழ >உறவுமழ
அழலினிகர் மறலி யெனை அழையாதே
செறியுமிரு வினை கரண மருவுபுலன் ஒழிய உயர்
திருவடியில் அணுக வரம் அருள்வாயே
சிவனைநிகர் பொதியவரை முனிவன் அகமகிழ இரு
செவிகுளிர இனியதமிழ் பகர்வோனே
நெறிதவறி அலரிமதி நடுவன் மகபதி முளரி
நிருதி நிதிபதி கரிய வனமாலி
நிலவுமறை அவனிவர்கள் அலைய அரசுரிமை புரி
நிருதனுரம் அற அயிலை விடுவோனே
மறிபரசு கரமிலகு பரமனுமை இருவிழியு
மகிழமடி மிசை வளரும் இளையோனே
மதலைதவழ் உததியிடை வருதரள மணி புளின
மறையவுயர் கரையிலுறை பெருமாளே. Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
மயல் பெருக ... மயக்கம் பெருகவும்,
உரையுமற ... பேச்சும் அடங்கிப் போகவும்,
விழிசுழல ... கண்கள் சுழலவும்,
அனலவிய ... உடம்பின் சூடு தணியவும்,
மலமொழுக ... மலம் (தன்னிச்சையின்றி) ஒழுகவும்,
அகலாதே அனையுமனை அருகிலுற ... நீங்காமலே என்
அன்னையும் மனைவியும் பக்கத்திலிருந்து
வெருவியழ ... பயந்து அழ,
உறவுமழ ... உறவினரும் அழ,
அழலினிகர் மறலி ... நெருப்பை நிகர்த்த கொடிய யமன்
யெனை அழையாதே ... என்னை அழைத்துச் செல்லாத படிக்கு,
செறியுமிரு வினை ... என்னை நெருங்கியுள்ள இருவினைகளும்
(நல்வினை, தீவினை),
கரண மருவுபுலன் ... என் மனமும், பொருந்தியுள்ள ஐம்புலன்களும்
ஒழிய ... ஒழிந்து நீங்கும்படியாக,
உயர் திருவடியில் அணுக ... உன் உயர்ந்த திருவடிகளை அணுக
வரம் அருள்வாயே ... எனக்கு வரம் தந்தருள்வாயாக
சிவனைநிகர் ... சிவனுக்கு ஒப்பான
பொதியவரை முனிவன் ... பொதியமலையைச் சார்ந்த முனிவன்
(அகத்தியன்)
அகமகிழ ... உள்ளம் மகிழ
இரு செவிகுளிர ... அவனது இரண்டு செவிகளும் குளிர,
இனியதமிழ் பகர்வோனே ... இனிய தமிழை ஓதியவனே
நெறிதவறி ... தத்தமக்கு உண்டான வழி தவறி
அலரிமதி நடுவன் ... சூரியன், சந்திரன், யமன்,
மகபதி முளரி ... இந்திரன், அக்கினி,
நிருதி நிதிபதி ... நிருதி, குபேரன்,
கரிய வனமாலி ... கரிய நிறமானவனும், துளசி மாலை தரித்த திருமாலும்,
நிலவுமறை ... நிலைத்த பிரமன்,
அவனிவர்கள் அலைய ... ஆகியவர்கள் அலையும்படி
அரசுரிமை புரி ... (கொடிய) ஆட்சி புரிந்த
நிருதனுரம் அற ... அசுரனாம் சூரனின் மார்பு பிளவுபடும்படி
அயிலை விடுவோனே ... வேலைச் செலுத்தியவனே
மறிபரசு கரமிலகு ... மானும், மழுவும் கரங்களில் விளங்கும்
பரமனுமை இருவிழியு ... பரமசிவனும், உமையும் தங்கள்
இருவிழிகளும்
மகிழமடி மிசை ... உவகைகொள்ளும்படி அவர்தம் மடியின் மேல்
வளரும் இளையோனே ... வளரும் இளைய குமாரனே
மதலைதவழ் உததியிடை ... கப்பல்கள் தவழும் கடலிடையே
வருதரள மணி ... வருகின்ற முத்து மணிகள்
புளின மறையவுயர் ... மணல்மேட்டில் மறையும்படி உயர்ந்த
கரையிலுறை பெருமாளே. ... (திருச்செந்தூர்க்) கரையில்
அமர்ந்த பெருமாளே.
1
Similar songs:
தனதனன தனதனன தனதனன தனதனன
தனதனன தனதனன ...... தனதானா
This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
send corrections and suggestions to admin-at-sivaya.org
thiruppugazh song